Monday, March 23, 2009

மழைகொள்ளும் சுகம்

மத்தியான வேளையிலே

மரம்பூத்த சாலையிலே

மனிதரற்ற நேரத்திலே

மழைகொள்ளும் சுகம் துறந்தால்

மனிதனாகி என்ன பயன்?

*****

ஆடி மாத முதல் மழையில்

அங்கம் அது நனைவதனை

அணுஅணுவாய் ரசிக்காமல்

அணில்குஞ்சாய் ஒதுங்கிநின்றால்

அறிவிருந்து என்ன பயன்?

*****

மழைத்துளிகள் முகம்கொள்ள

மழைசாரல் மனம்கொள்ள

மகிழ்ச்சியிலே உடல்துள்ள

மறுத்துவிட்டு மறைந்து நின்றால்

மனசிருந்து என்ன பயன்?

3 comments:

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

வரவேற்கிறோம் புதுக் கவிஞனை வலைப்பூக்கள் உலகத்திற்கு

அன்புடன்
ஜகதீஸ்வரன்
http://www.jackpoem.blogspot.com/

சதீஷ் குமார் said...

Thanks

Anonymous said...

தோழர் சதீஷ் அவர்களுக்கு ,

உங்களது இந்த கவிதை நன்றாக இருக்கிறது.

இயந்திரமாகிவிட்ட வாழ்கையில்
மனிதன் மறந்து விட்ட
கணங்கள், கவிதையாய் மலர்ந்து இருக்கிறது.

ஆனால், அந்த தருணகளை சற்று , தங்களது
கவிதையில் நீடித்து இருக்கலாம் என்பது
என் கருத்து.

Post a Comment