Saturday, March 14, 2009

ஏன் தாமதம்!

நான் நஞ்சை

நீ மேகம்

பொழிவதாக சொல்லி சொல்லி

போய்க்கொண்டே இருக்கிறாய்

பொழியாமலே....

என்றேனும் - நீ

பொழிய நினைக்கையில்

ஒருவேளை - நான்

பாலையாகி இருக்க கூடும்!

*****

என்னை சங்கடப்படுத்துவதில் எல்லாம்

சந்தோஷப்பட்டு கொண்டே இருக்கிறாய்

என்றேனும் - என்னை

சந்தோஷப்படுத்த விரும்புகையில்

ஒருவேளை

நானில்லாது - நீ

சங்கடப்பட்டிருக்க கூடும்!

*****

என் எல்லா தவங்களுக்கும்

சாபங்களையே தந்துகொண்டு இருக்கிறாய்.

என்றேனும் - நீ

வரம் தர நினைக்கையில்

தவமாயிருந்த நான்

சவமாயிருக்கக்கூடும்!

No comments:

Post a Comment