Sunday, March 15, 2009

பழகி கொள்வாயா

பரவும் மழையில் நனைய - என்
பணிநிலை மறுக்கும் போதும்
உறவும் ஊரும் என்னை - சற்று
உதறி தள்ளும் போதும்


விழிகள் கசியும் போதும் - இதயம்
விதிர வலிக்கும் போதும்
பழிகள் சுமந்த நெஞ்சில் - கொஞ்சம்
பதற்றம் நிறையும் போதும்

வாழ்வின் அவலம் தீர்க்க - நல்ல
வழியில்லை என்றே நாளும்
பாழ்மனம் வெம்பி வீழ்ந்து - நான்
பதறி தவிக்கும் போதும்

இயல்பாய் இயங்கி வர
பழகி கொள்வாயா என் சுவாசமே?

No comments:

Post a Comment