Saturday, August 31, 2013

அன்பால் அழிந்தவன்


எனக்கும் உனக்குமான உறவை..

உதாசீனம் செய்வதே

உன் உள்ளம் மட்டும் தான்!

பூங்கொத்துக்களோடு வரவேற்கவேண்டியவள்

பூத கணங்களோடு எதிர்கொள்கிறாள்

அன்பால் செய்யவேண்டியதை எல்லாம்

அகங்காரத்தால் செய்து தொலைக்கிறாள்

தன்னை நோக்கி

தாவி வரும் மழை துளியை –

பாலைவனம் –

தன் வெப்பம் கொண்டு

தானே கொல்வது போல;

உன்னை நோக்கி வரும்போதெல்லாம் –

உடைத்து விளையாடுகிறாய் –

உணர்விழந்த என் உள்ளத்தை!

ஒளிமயமாக திகழவேண்டிய என் வாழ்வு –

உன்னால் –

பழிமயமாக படர்ந்து நிற்கிறது

மகிழ்ச்சிக்கும் உண்டோர் மரணதினம் –

எனின் –

இகழ்ச்சிக்கு உண்டோ ஒரு இறந்ததினம்?

என்னை நோக்கும் எல்லா இதழ்களிலும் –

புகழ்ச்சிக்கு பதில் இகழ்ச்சியே.. உட்கார்ந்திருக்கிறது...

இறுமாப்புடன்

அன்பால் அழிந்தவனுக்கு –

அடியேன் மட்டுமே ஆதாரம்!

தொழுபவனும், நிந்திப்பவனும் கடவுளையே

சதா சர்வ காலமும் நினைத்து கொண்டிருப்பது மாதிரி

எனக்கு

எப்போதுமே உன் ஞாபகம் தான்....

ஞாபகம் என்பது பயத்தின் மறுபெயர் ஆனால்!