தொலைத்தது தெரியும்
தொலைத்த இடமும் தெரியும்
தேடத்தான் முயலவில்லை
நானே விரும்பி இழந்த என் சுயத்தை
***
நான் சுவாசிக்கும் இந்த காற்றில் எங்கோ இருக்கும் உன் சுவாசமும் கலந்திருக்கக்கூடும் என்கிற நம்பிக்கையே போதும்...நான் உயிர்த்திருக்க..
***
பல தோல்விகளுக்கும், அவமானங்களுக்கும் நான் 'படிப்பினை' என பெயரிட்டு வைத்திருக்கிறேன், என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்ள
***
தன்னை தானே தேநீரில் கரைத்தழித்து தேநீரை சுவையாக்கும் சர்க்கரைபோல. .என்னில் கரைந்து என்னை வாழவைக்கிறது உன் நினைவு
***
என்றேனும் ஒருநாள் என் மன உணர்வுகள் புரிந்துகொள்ளப்படக்கூடும் என்பது கூட ஒருவகையில் மூடநம்பிக்கையின்பாற் படும்
***
எல்லா எதிர்பார்ப்புகளும் பொய்த்துப்போனபின்னாலும், மீண்டும் நடவுசெய்து காத்திருக்கிறேன், நம்பிக்கை நாற்றுகளை...இதுவும் பொய்க்கும்வரை.