Wednesday, October 19, 2016

நடவு செய்த நம்பிக்கைகள்

தொலைத்தது தெரியும்
தொலைத்த இடமும் தெரியும்

தேடத்தான் முயலவில்லை

நானே விரும்பி இழந்த என் சுயத்தை

***

நான் சுவாசிக்கும் இந்த காற்றில் எங்கோ இருக்கும் உன் சுவாசமும் கலந்திருக்கக்கூடும் என்கிற நம்பிக்கையே போதும்...நான் உயிர்த்திருக்க..

***
பல தோல்விகளுக்கும், அவமானங்களுக்கும் நான் 'படிப்பினை' என பெயரிட்டு வைத்திருக்கிறேன், என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்ள

***

தன்னை தானே தேநீரில் கரைத்தழித்து தேநீரை சுவையாக்கும் சர்க்கரைபோல. .என்னில் கரைந்து என்னை வாழவைக்கிறது உன் நினைவு

***
என்றேனும் ஒருநாள் என் மன உணர்வுகள் புரிந்துகொள்ளப்படக்கூடும் என்பது கூட ஒருவகையில் மூடநம்பிக்கையின்பாற் படும்

***

எல்லா எதிர்பார்ப்புகளும் பொய்த்துப்போனபின்னாலும், மீண்டும் நடவுசெய்து காத்திருக்கிறேன், நம்பிக்கை நாற்றுகளை...இதுவும் பொய்க்கும்வரை.

1 comment:

Post a Comment