எதிர்பார்ப்பது
ஏமாறுவது
வழக்கம் எனக்கு!
ஏக்கம் தருவது
துக்கம் தருவது
வழக்கம் உனக்கு!
****
அதிசயமாய்
அன்றொருநாள்
அள்ளியெடுத்து
அளப்பரிய முத்தம் தந்தை
நெற்றி முதல் - என்
நெஞ்சு வரை!
****
ஆதவன் மறைந்து
அந்தி சாய்ந்ததும்
அடித்து ஓய்ந்தது - ஓர்
அடைமழை!
அந்த
அதிசயம் கண்டு!
Wednesday, April 28, 2010
Thursday, April 22, 2010
மின்னல் தருணங்கள்!
கூடல் மாநகர்...
கூடு போன்ற அறை...
இருபக்கம் ஜன்னல்
மறுபக்கம் வைகை...
மடிகிடக்க நீ...
தலைகோத நான்...
முயங்கி முடிகையில் முடிந்த இரவு...
கொங்கு தேசம்
மலைக்கோவில் சாலை
குதிரை போன்றொரு வண்டி
பின்னிருக்கையில் நீ
அணைத்து பிடித்த உன் கை
என் தோள் தாங்கிய உன் தாடை
உன் மூச்சு சுடும் நெருக்கம்
ஒருக்களித்த வண்டி
சாய்ந்து திரும்புகையில்
எதிர்பாராமல் - உன் முத்தம்..
உச்ச கோபம்...
ரவுத்திர வெறி...
கத்தி தீர்த்தபின் கண்டேன் - உன்
கன்னத்தில் கண்ணீர்..
உதடு துடிக்க உன் விம்மல்..
நாராசமான உன் நிசப்தம்...
கலவரமான உன் விழிகள்...
அத்தனையையும் சிந்தாமல்
அள்ளி எடுத்த என் உள்ளங்கை..
அள்ளி கொடுத்த உன் உதடுகள்...
வெண்பனி சிகரம்
உடல் துளைக்கும் குளிர்
குளிர் தடுக்கும் கம்பளி
கம்பளி கடக்கும் காற்று
நடக்க முடியாத நடுக்கம்
விலக நினைக்காத நெருக்கம்
உன் கைகள் கோர்த்த வெப்பம்
மலை சாலை நடந்த இன்பம்
வளவளவென்ற உன் பேச்சு
கலகலவென்ற உன் சிரிப்பு
உன் தோள் தட்டி சென்ற மேகம்
என் மேல் முட்டி நின்ற மோகம்
சந்தோஷ காலை
அரவமற்ற வேளை
வெதுவெதுப்பான குளியல்
கதகதப்பான காப்பி
தலை துவட்டிய துப்பட்டா
இருவருக்குமாக ஒரு தட்டில் தோசை
உன் கையால் பசியாறிய நாம்
பேசி தீர்த்த மாலை
அகல் விளக்கு வெளிச்சம்
மடி புரண்ட நீ
மனம் புரண்ட நான்
செல்ல சீண்டலில் - என்
உதடு கிழித்த உன் நகம்
உடனே அதை வெட்டிய உன் சினம்..
கனவுகளில் சின்டெரெல்லா..
உதட்டு சிரிப்பால் உறக்கம் கலைந்த நீ...
ஆச்சரியாமாய் கேட்ட என் கனவு கதை...
சின்டெரெல்லா மீதான் உன் ஆத்திரம்...
என் நெஞ்சேறி கிடந்துறங்கிய மிச்ச இரவு!
காங்கரீட் காடு..
கட்டு கட்டாக வீடு..
சமையலறையில் என் யுத்தம்
தள்ளி நின்று ரசிக்கும் உன் சத்தம்..
கஞ்சியான பிரியாணி..
கேலி செய்த உன் சிணுங்கல்..
தலை குனிந்த நான்.
உச்சந்தலையில் உன் முத்தம்...
கால் கொத்தும் கடல்
மலையாள மணல்
விரல் கோர்த்து நீ
விழி கோர்த்து நான் !
உனக்கோ
அலை நனைக்க பயம்
கரை மீளவும் பயம்
தொட்டு செல்லும் நுரை
அதை மட்டும் ரசித்த உன் முகம்..
உன்னை அள்ளியெடுத்து கடல் செல்கையில்
அச்சம் கொண்ட உன் அலறல்...
திரும்ப திரும்ப புரண்ட உன் திமிறல்...
கடல் குளித்த நீ...
அச்சம் தெளிந்த முகம்..
என் நெஞ்சில் குத்தி
நீ இட்ட செல்ல சண்டை...
என்னை அழைத்து கடல் புகுந்த
உன் ஆர்வம்..
கூடு போன்ற அறை...
இருபக்கம் ஜன்னல்
மறுபக்கம் வைகை...
மடிகிடக்க நீ...
தலைகோத நான்...
முயங்கி முடிகையில் முடிந்த இரவு...
கொங்கு தேசம்
மலைக்கோவில் சாலை
குதிரை போன்றொரு வண்டி
பின்னிருக்கையில் நீ
அணைத்து பிடித்த உன் கை
என் தோள் தாங்கிய உன் தாடை
உன் மூச்சு சுடும் நெருக்கம்
ஒருக்களித்த வண்டி
சாய்ந்து திரும்புகையில்
எதிர்பாராமல் - உன் முத்தம்..
உச்ச கோபம்...
ரவுத்திர வெறி...
கத்தி தீர்த்தபின் கண்டேன் - உன்
கன்னத்தில் கண்ணீர்..
உதடு துடிக்க உன் விம்மல்..
நாராசமான உன் நிசப்தம்...
கலவரமான உன் விழிகள்...
அத்தனையையும் சிந்தாமல்
அள்ளி எடுத்த என் உள்ளங்கை..
அள்ளி கொடுத்த உன் உதடுகள்...
வெண்பனி சிகரம்
உடல் துளைக்கும் குளிர்
குளிர் தடுக்கும் கம்பளி
கம்பளி கடக்கும் காற்று
நடக்க முடியாத நடுக்கம்
விலக நினைக்காத நெருக்கம்
உன் கைகள் கோர்த்த வெப்பம்
மலை சாலை நடந்த இன்பம்
வளவளவென்ற உன் பேச்சு
கலகலவென்ற உன் சிரிப்பு
உன் தோள் தட்டி சென்ற மேகம்
என் மேல் முட்டி நின்ற மோகம்
சந்தோஷ காலை
அரவமற்ற வேளை
வெதுவெதுப்பான குளியல்
கதகதப்பான காப்பி
தலை துவட்டிய துப்பட்டா
இருவருக்குமாக ஒரு தட்டில் தோசை
உன் கையால் பசியாறிய நாம்
பேசி தீர்த்த மாலை
அகல் விளக்கு வெளிச்சம்
மடி புரண்ட நீ
மனம் புரண்ட நான்
செல்ல சீண்டலில் - என்
உதடு கிழித்த உன் நகம்
உடனே அதை வெட்டிய உன் சினம்..
கனவுகளில் சின்டெரெல்லா..
உதட்டு சிரிப்பால் உறக்கம் கலைந்த நீ...
ஆச்சரியாமாய் கேட்ட என் கனவு கதை...
சின்டெரெல்லா மீதான் உன் ஆத்திரம்...
என் நெஞ்சேறி கிடந்துறங்கிய மிச்ச இரவு!
காங்கரீட் காடு..
கட்டு கட்டாக வீடு..
சமையலறையில் என் யுத்தம்
தள்ளி நின்று ரசிக்கும் உன் சத்தம்..
கஞ்சியான பிரியாணி..
கேலி செய்த உன் சிணுங்கல்..
தலை குனிந்த நான்.
உச்சந்தலையில் உன் முத்தம்...
கால் கொத்தும் கடல்
மலையாள மணல்
விரல் கோர்த்து நீ
விழி கோர்த்து நான் !
உனக்கோ
அலை நனைக்க பயம்
கரை மீளவும் பயம்
தொட்டு செல்லும் நுரை
அதை மட்டும் ரசித்த உன் முகம்..
உன்னை அள்ளியெடுத்து கடல் செல்கையில்
அச்சம் கொண்ட உன் அலறல்...
திரும்ப திரும்ப புரண்ட உன் திமிறல்...
கடல் குளித்த நீ...
அச்சம் தெளிந்த முகம்..
என் நெஞ்சில் குத்தி
நீ இட்ட செல்ல சண்டை...
என்னை அழைத்து கடல் புகுந்த
உன் ஆர்வம்..
Subscribe to:
Posts (Atom)