அடுத்த
அறையில்
அயர்ந்து உறங்குகிறது - என்
அரைக்கால் நூற்றாண்டு காதல்!
இதையத்தில்
இமையத்தை ஏற்றி வைத்து
இந்த அறையில்
இமை மூடாதிருக்கிறேன்
இந்த
இரவில்!
இருவர்க்கும்
இடையேயான
இடைவெளியாய்
இருந்துகொண்டிருப்பது - வெறும்
சுவர் மட்டுமே தானா??
இணையாத
இதையங்கள் கொண்ட உடல்கள்
இணைவதேயில்லை ஒருபோதும்!
Sunday, January 17, 2010
Thursday, January 7, 2010
பேராசை
உள்ளம் உடைந்து போகும்போதெல்லாம்
உனது சில வார்த்தைகளில்
உண்டாகும் ஆறுதல்...
விழிகளில் வழியும் முன் - உன்
விரல்சுண்டி மரிக்கும் கண்ணீர்...
ஒவ்வொரு விடியலிலும்
ஓரளவேனும் அமைதி...
இதையத்திலேப்போதும்
இருக்கை இட்ட நீ..
துக்கம் தகர்க்கும் பொழுதுகளில் - உன்
துளிர்மடி கிட்டும் சாந்தி..
நட்ட்று வீழும் வேளை - கொஞ்சம் உன்
நம்பிக்கை வார்த்தைகள்..
இவை மட்டுமே எனக்கு
நிரந்தரமாகிவிடக்கூடாதா??
****** ********* ********** **********
எழுதப்பட்ட நாள்: 17-09-2000
உனது சில வார்த்தைகளில்
உண்டாகும் ஆறுதல்...
விழிகளில் வழியும் முன் - உன்
விரல்சுண்டி மரிக்கும் கண்ணீர்...
ஒவ்வொரு விடியலிலும்
ஓரளவேனும் அமைதி...
இதையத்திலேப்போதும்
இருக்கை இட்ட நீ..
துக்கம் தகர்க்கும் பொழுதுகளில் - உன்
துளிர்மடி கிட்டும் சாந்தி..
நட்ட்று வீழும் வேளை - கொஞ்சம் உன்
நம்பிக்கை வார்த்தைகள்..
இவை மட்டுமே எனக்கு
நிரந்தரமாகிவிடக்கூடாதா??
****** ********* ********** **********
எழுதப்பட்ட நாள்: 17-09-2000
கண்ணீர் தருணங்கள்
விழித்து பார்க்கும்
விடியல் ஒவ்வொன்றிலும் - நான்
விசாரிக்கப்படாமல் போகையிலும்..
இரவை கடத்த
இயலாத - என்
இற்றுவிட்ட
இதையம்
இறந்துவிடுமோ - என
இமைகள் துடிக்கையிலும்..
கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!
****
என்
பாச வேர்கள்
பட்டுபோகையிலும்
சுவாச மண்டலம்
சுட்டு போதையிலும்
கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!
****
தாங்க முடியாத தோல்விகளை - நான்
சந்திக்க நேர்கையிலும்
தூங்க முடியாத இரவுகளில் - நான்
சிந்திக்க முயலுகையிலும்
நான் நிராகரிக்கப்படும்
எல்லா நிமிடங்களிலும்
நான் சந்தேகிக்கப்படும்
எல்லா வினாடிகளிலும்
கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!
****
என்
வாழ்வின் முன்னுரையை
வாசிக்க நேர்கையிலும்
என்
தாழ்வின் காரணீயர்களை
தரிசிக்க நேர்கையிலும்..
கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!
****
எனினும்..
இன்று சிந்தப்பட்ட கண்ணீரின்
அடர்த்தியும் கனமும்
அதிகரித்திருப்பதற்கு
அடியேன் மட்டுமே காரணமல்ல!
********** ********** **********
எழுதப்பட்ட நாள்: 06.12.1999
எழுதப்பட்ட இடம்: கோவை
விடியல் ஒவ்வொன்றிலும் - நான்
விசாரிக்கப்படாமல் போகையிலும்..
இரவை கடத்த
இயலாத - என்
இற்றுவிட்ட
இதையம்
இறந்துவிடுமோ - என
இமைகள் துடிக்கையிலும்..
கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!
****
என்
பாச வேர்கள்
பட்டுபோகையிலும்
சுவாச மண்டலம்
சுட்டு போதையிலும்
கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!
****
தாங்க முடியாத தோல்விகளை - நான்
சந்திக்க நேர்கையிலும்
தூங்க முடியாத இரவுகளில் - நான்
சிந்திக்க முயலுகையிலும்
நான் நிராகரிக்கப்படும்
எல்லா நிமிடங்களிலும்
நான் சந்தேகிக்கப்படும்
எல்லா வினாடிகளிலும்
கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!
****
என்
வாழ்வின் முன்னுரையை
வாசிக்க நேர்கையிலும்
என்
தாழ்வின் காரணீயர்களை
தரிசிக்க நேர்கையிலும்..
கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!
****
எனினும்..
இன்று சிந்தப்பட்ட கண்ணீரின்
அடர்த்தியும் கனமும்
அதிகரித்திருப்பதற்கு
அடியேன் மட்டுமே காரணமல்ல!
********** ********** **********
எழுதப்பட்ட நாள்: 06.12.1999
எழுதப்பட்ட இடம்: கோவை
Monday, January 4, 2010
இவளுக்கு புதிரென்று பேர்!
அவளுக்கு இலக்கியம் தெரியாது!
இவளுக்கு
இலக்கிய ஆசிரியர்களின்
அகரவரிசையே அத்துப்படி!
*****
அவளுக்கு நவீனத்துவம் புரியாது!
இவளுக்கு
பின் நவீனத்துவம் கூட
பிரபலம்!
*****
அவளுக்கு பயணங்கள் பிடிக்காது!
இவளுக்கு
மாநிலத்தின் நீள அகலங்கள்
நினைவறைகளை
நிறைத்து நிற்கும்!
*****
அவளுக்கு தனிமை ஆகாது!
இவளுக்கு
பெருங்கூட்டம், உறவுகள், கலகலப்பு
உன்மத்தம்!
*****
அவளுக்கு
என்னை திகட்ட திகட்ட
நேசிக்க தெரிந்திருக்கிறது!
இவளுக்கு???
இவளுக்கு
இலக்கிய ஆசிரியர்களின்
அகரவரிசையே அத்துப்படி!
*****
அவளுக்கு நவீனத்துவம் புரியாது!
இவளுக்கு
பின் நவீனத்துவம் கூட
பிரபலம்!
*****
அவளுக்கு பயணங்கள் பிடிக்காது!
இவளுக்கு
மாநிலத்தின் நீள அகலங்கள்
நினைவறைகளை
நிறைத்து நிற்கும்!
*****
அவளுக்கு தனிமை ஆகாது!
இவளுக்கு
பெருங்கூட்டம், உறவுகள், கலகலப்பு
உன்மத்தம்!
*****
அவளுக்கு
என்னை திகட்ட திகட்ட
நேசிக்க தெரிந்திருக்கிறது!
இவளுக்கு???
Sunday, January 3, 2010
உயிர்த்திருத்தலின் வலி
நினைவுகள் பகிர்ந்து கொண்டேன் - சில
நிஜங்களை உணர்ந்து கொண்டேன்!
பனைமரம் போலே வளர்ந்தும் - நான்
பக்குவம் இல்லை கண்டேன்!
விழிகளில் கண்ணீர் துளிகள் - பெரும்
விரைவிலே வழிய நின்றேன்!
மொழிகளில் சொல்லா துயரம் - என்
மோனத்தில் உரைத்து நின்றேன்!
போனவை போன பின்பும் - நான்
போக்கற்று போய்விட வில்லை!
ஆனது ஆனது என்று - என்னை
ஆறுதல் செய்திட வில்லை!
இன்பமும் துன்பமும் வாழ்வில் - என்றும்
இருபக்கம் என்றே சொல்லி
துன்பத்தை ஏற்று கொள்ளும் - பெரும்
துயரத்தை பழகி கொண்டேன்!
துன்பமும் துன்பமே அல்ல - ஒரு
துப்பின்றி தோற்ற முயற்சி!
வன்மமும் கோபமும் இன்றி - நல்
வாழ்வுக்கு ஆன பயிற்சி!
என்பதை கண்டு கொண்டும் - நான்
இழந்ததை எண்ணி நொந்தேன்!
என்பதால் என்ன செய்தேன் - நான்
இன்னமும் உயிர்த்து நின்றேன்.
நிஜங்களை உணர்ந்து கொண்டேன்!
பனைமரம் போலே வளர்ந்தும் - நான்
பக்குவம் இல்லை கண்டேன்!
விழிகளில் கண்ணீர் துளிகள் - பெரும்
விரைவிலே வழிய நின்றேன்!
மொழிகளில் சொல்லா துயரம் - என்
மோனத்தில் உரைத்து நின்றேன்!
போனவை போன பின்பும் - நான்
போக்கற்று போய்விட வில்லை!
ஆனது ஆனது என்று - என்னை
ஆறுதல் செய்திட வில்லை!
இன்பமும் துன்பமும் வாழ்வில் - என்றும்
இருபக்கம் என்றே சொல்லி
துன்பத்தை ஏற்று கொள்ளும் - பெரும்
துயரத்தை பழகி கொண்டேன்!
துன்பமும் துன்பமே அல்ல - ஒரு
துப்பின்றி தோற்ற முயற்சி!
வன்மமும் கோபமும் இன்றி - நல்
வாழ்வுக்கு ஆன பயிற்சி!
என்பதை கண்டு கொண்டும் - நான்
இழந்ததை எண்ணி நொந்தேன்!
என்பதால் என்ன செய்தேன் - நான்
இன்னமும் உயிர்த்து நின்றேன்.
Subscribe to:
Posts (Atom)