Tuesday, September 15, 2009

பதியமிடாத பால்முகம்!

சிறகற்ற தேவதையாய் சின்னவளுன் முகம்பார்த்து

உறவற்ற நிலைபோலே உடைந்தேபோனேன்!

தெளிவற்ற நெஞ்சுக்குள் தென்றலும் புயலாக

கிளிபென்னுன் மொழிகேட்டு கிழிந்தே போனேன்!

தொடுன்தூரம் தானிருந்தும் தொக்கிவரும் தயக்கத்தில்

நெடுந்தூரம் வீசிவிட்டேன் நெஞ்சத்து ஆவலேல்லாம்

மணியோசை முழங்கிவரும் மலர்சிரிப்பை கேட்டேநான்

பிணிமறந்தேன் பசிமறந்தேன் பிரிதெல்லாம் மறந்தேன்!

சந்தன காப்பிட்டு சரீரம் பூத்திட்டு

வந்தனம் செயநானும் வழியின்றி போனபின்

நிலவினை கொள்ளையிடும் நிச்சலன முகம்தன்னை

பலவாறு முயன்றேன்னில் பதியமிட மறந்தேனே!

Thursday, September 10, 2009

உனக்காக வாழட்டுமா?

சங்கீத வரிகளின் சங்கேதம் புரியாமல்
இங்கீதம் பிழன்றுவிட்ட இசையாக ஆனேன்!
விண்ணோடு போட்டியிடும் விழியசைவு விளங்காமல்
கண்ணோடு வென்நீர்வர கவிமறந்து போனேன்!

புன்சிரிப்பின் ஒலிக்குறிப்பு புரியாமல் போனதனால்
என்சிரிப்பு மறந்ததனை எப்படித்தான் சொல்லுவதோ?
செம்பூக்கள் தோற்றுவிடும் செம்மாது உதட்டழகில்
வெம்பாத என்நெஞ்சை வெல்லாமல் செல்லுவதோ?

விழிவானம் திறந்திருந்தும் விழுந்திடாத நிலவைப்போல்
பழிதீர்ந்தும் மனக்கிளிக்கோ பறந்துவிட தோன்றவில்லை!
பரிபாலம் செய்கின்ற பணிமானது இன்றேனோ
சரிபாதி உயிர்போயும் சவக்குழியை தேடவில்லை!