Tuesday, September 15, 2009

பதியமிடாத பால்முகம்!

சிறகற்ற தேவதையாய் சின்னவளுன் முகம்பார்த்து

உறவற்ற நிலைபோலே உடைந்தேபோனேன்!

தெளிவற்ற நெஞ்சுக்குள் தென்றலும் புயலாக

கிளிபென்னுன் மொழிகேட்டு கிழிந்தே போனேன்!

தொடுன்தூரம் தானிருந்தும் தொக்கிவரும் தயக்கத்தில்

நெடுந்தூரம் வீசிவிட்டேன் நெஞ்சத்து ஆவலேல்லாம்

மணியோசை முழங்கிவரும் மலர்சிரிப்பை கேட்டேநான்

பிணிமறந்தேன் பசிமறந்தேன் பிரிதெல்லாம் மறந்தேன்!

சந்தன காப்பிட்டு சரீரம் பூத்திட்டு

வந்தனம் செயநானும் வழியின்றி போனபின்

நிலவினை கொள்ளையிடும் நிச்சலன முகம்தன்னை

பலவாறு முயன்றேன்னில் பதியமிட மறந்தேனே!

No comments:

Post a Comment