Wednesday, June 16, 2010

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

அன்பென்ற சொல்லுக்கு
அடிமை செய்தல் என்றுமா அர்த்தம்?

நேசித்து கொல்லுவதை
நேரில் அனுபவித்த வலி.

கண்ணை தின்று
கண்ணனை கொன்று
களியாட்டம் ஆடும் வெறி

வாழ்வை தொலைக்க
காட்டிய ஆர்வம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

Wednesday, June 9, 2010

மீண்டும் ஒரு வசந்தம்!

கனவுகள் கலைத்தது
கதவுடைக்கும் சப்தம்!

வாசல் தாண்டி வந்தது
வார்த்தைகள் அற்ற மவுனம்!

மவுனத்தின் பேரிரைச்சலில்
மனவோசையின் மரணம்!

எதிர்த்தோடிய திசையில் என்
எதிர்காலம்!

எல்லாம் களைத்த ஏகாந்த பொழுதில்
வந்து சேர்ந்ததொரு 
வசந்தம்!