Friday, March 12, 2010

எங்கே போய் முடியும்?

எல்லாம் முடிந்து போனவொரு
ஏகாந்த மாலையில்
ஏக்கங்கள் தீராத
ஏலாத விழிகளில் -
மிச்சமிருப்பதாய் தோன்றவில்லை
வாழ்க்கையும்
நம்பிக்கையும்!

*****

ஏமாற்றங்கள் மட்டுமே
எதார்த்தமாகிப்போன
என் வாழ்வில்
ஏதேனும் ஒரு
பேராச்சரியம் நிகழாதாவெனும்
நப்பாசை கூட காலாவதியாகி போய்விட்டது!

*****

உதாசீனப்படுத்துவோரையும்
உள்ளத்துள் நேசிப்பதால்
நெஞ்சுக்குள்ளே - இப்போது - இட
நெருக்கடி!