Thursday, September 10, 2009

உனக்காக வாழட்டுமா?

சங்கீத வரிகளின் சங்கேதம் புரியாமல்
இங்கீதம் பிழன்றுவிட்ட இசையாக ஆனேன்!
விண்ணோடு போட்டியிடும் விழியசைவு விளங்காமல்
கண்ணோடு வென்நீர்வர கவிமறந்து போனேன்!

புன்சிரிப்பின் ஒலிக்குறிப்பு புரியாமல் போனதனால்
என்சிரிப்பு மறந்ததனை எப்படித்தான் சொல்லுவதோ?
செம்பூக்கள் தோற்றுவிடும் செம்மாது உதட்டழகில்
வெம்பாத என்நெஞ்சை வெல்லாமல் செல்லுவதோ?

விழிவானம் திறந்திருந்தும் விழுந்திடாத நிலவைப்போல்
பழிதீர்ந்தும் மனக்கிளிக்கோ பறந்துவிட தோன்றவில்லை!
பரிபாலம் செய்கின்ற பணிமானது இன்றேனோ
சரிபாதி உயிர்போயும் சவக்குழியை தேடவில்லை!

No comments:

Post a Comment