Thursday, January 7, 2010

கண்ணீர் தருணங்கள்

விழித்து பார்க்கும்
விடியல் ஒவ்வொன்றிலும் - நான்
விசாரிக்கப்படாமல் போகையிலும்..

இரவை கடத்த
இயலாத - என்
இற்றுவிட்ட  
இதையம்
இறந்துவிடுமோ - என
இமைகள் துடிக்கையிலும்..

கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!

****

என்
பாச வேர்கள்
பட்டுபோகையிலும்
சுவாச மண்டலம்
சுட்டு போதையிலும்

கண்ணீரின் கனத்தை - நான்

கண்டதுண்டு!

****

தாங்க முடியாத தோல்விகளை - நான்
சந்திக்க நேர்கையிலும்
தூங்க முடியாத இரவுகளில் - நான்
சிந்திக்க முயலுகையிலும்

நான் நிராகரிக்கப்படும்
எல்லா நிமிடங்களிலும்
நான் சந்தேகிக்கப்படும்
எல்லா வினாடிகளிலும்

கண்ணீரின் கனத்தை - நான்

கண்டதுண்டு!

****

என்
வாழ்வின் முன்னுரையை
வாசிக்க நேர்கையிலும்
என்
தாழ்வின் காரணீயர்களை
தரிசிக்க நேர்கையிலும்..

கண்ணீரின் கனத்தை - நான்

கண்டதுண்டு!

****
எனினும்..
இன்று சிந்தப்பட்ட கண்ணீரின்
அடர்த்தியும் கனமும்
அதிகரித்திருப்பதற்கு
அடியேன் மட்டுமே காரணமல்ல!

**********   **********   **********
எழுதப்பட்ட நாள்: 06.12.1999
எழுதப்பட்ட இடம்: கோவை

No comments:

Post a Comment