Wednesday, April 28, 2010

அதிசயம்!

எதிர்பார்ப்பது
ஏமாறுவது
வழக்கம் எனக்கு!

ஏக்கம் தருவது
துக்கம் தருவது
வழக்கம் உனக்கு!

****

அதிசயமாய்
அன்றொருநாள்
அள்ளியெடுத்து
அளப்பரிய முத்தம் தந்தை
நெற்றி முதல் - என்
நெஞ்சு வரை!
****

ஆதவன் மறைந்து
அந்தி சாய்ந்ததும்
அடித்து ஓய்ந்தது - ஓர்
அடைமழை!

அந்த
அதிசயம் கண்டு!

1 comment:

Anonymous said...

ஏமாற்றுவது

நீ

என்ற

காரணத்தினாலே

மறுபடியும்

மறுபடியும்

ஏமாறி கொண்டு இருக்கிறேன்.

Post a Comment