Tuesday, March 17, 2009

ஆசீர்வதிக்கப்படலாகாதா?

சிறுபிள்ளை தனமான

சிந்தனைகளால்

சிதைந்தது

சிந்தை!

இனி

பல விஷயங்களுக்கு - என்னை

பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்!

*****

உன்னை அடிக்கடி - என்

உள்விழிகள் காண முடியாமல் போகலாம்...

உள்ளத்து உணர்வுகளை

உரையாடி தீர்க்கமுடியாமல் போகலாம்...

அவஸ்த்தை நிமிடங்களில் - உன்

ஆறுதல் கிட்டாமல் போகலாம்...

இக்கட்டான பொழுதுகளில் - உன்

ஆலோசனைகளையோ

அறிவுரைகளையோ

அளிக்கப்படாமல் போகலாம்...

அன்னியோன்னியத்தில் இருந்து

அன்னியத்திற்கும் - ஒரு

அகதியை போல - நான்

அகற்றப்பட நேரலாம்...

paarththe தீரவேண்டுமென

பார்வை அரித்தால்

தெருவில் எங்கேனும் இருந்து

நீயறியாதுனை

தரிசித்துக்கொள்ள நேரலாம்...

எல்லாவற்றுக்கும் - எனை இனி

பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்!

*****

ஒரேயொரு ஆறுதல்!

என்றேனும் - நான்

ஆசீர்வதிக்கப்படும் ஒரு நன்னாளில்

நினைவுகள் திரட்டி - அரைநிமிடம்

நீ என்னை

நலம் விசாரிக்கவும் கூடும்!

*****

திங்களில் - ஒரே ஒரு

தினமெனும்

ஆசீர்வதிக்கப்படலாகாதா?

No comments:

Post a Comment