Monday, March 16, 2009

மீண்டும் மீண்டும் வா!

பவுர்ணமி நனைக்கும் இரவோடு
பட்டினி கொல்லும் உணவோடு
மவுனம் வழியும் இசையோடு
மடியில் உறங்க நீ வேண்டும்!
*****
வெப்பம் கொல்லும் கோடை
வேர்வை கசியும் வாடை
நுட்பம் போல நெஞ்சுள்
நுஜைந்து அடங்க நீ வேண்டும்!
*****
திவலை கண்ணீர் தேக்கி
தெறித்து வீழும் நேரம்
கவலை கறைகள் நீக்கி
கதற உன்மடி வேண்டும்!
*****
நெருப்பு நதியில் நீந்தி
நெஞ்சம் எரியும் வேளை
இருப்பு கொள்ளா இதயம்
ஏங்கி தவிக்கும் வேளை
*****
ஆறுதல் படுத்தி போகும்
அமுத விழிகள் வேண்டும்
மீறுதல் தவறே இல்லை
மீண்டும் நீயே வேண்டும்!

No comments:

Post a Comment