Saturday, March 14, 2009

விடியலை நோக்கி!

என்றைக்கும் சற்றும்

குறையாத அதேபகலிரவு தான் இன்றும்


எனினும்

இன்றைய பகலின் பங்கை

இரவு திருடிக்கொண்டதொவென

இன்னமும் ஐயமாய் தானிருக்கிறது.

பட்டென முடிந்துபோன

பகலை விடவும்

பலவாறாய் நீளுமிரவு

படுத்துகிறது.

மூன்றுமுறை விழித்துப்பார்த்தும்

வானம்விடிந்திருக்கவில்லை!

யார்யாரோ கல்லெறிந்து

கலைத்த என் கனவுகளில்
நீ மட்டும்

கவிதை பொழிந்தாய்.

உன்முகம் கண்டபோதெல்லாம்
விடிந்துவிட்டதாய்

விளங்கி கொண்டதென் தவறு.


சரி...

எப்போது விடியும் என் வானம்??

No comments:

Post a Comment