Sunday, September 19, 2010

ஒரே ஒரு முறை!

அழுத விழிகள் ஆறவிட்ட
  அமுத இதழின் முத்தங்களும்
பழுது பட்ட நெஞ்சுக்குள்
  பகர்ந்து வைத்த பாசங்களும்

மீண்டும் வேண்டி அலைகின்றேன்
  மீளா துயரில் தவழ்கின்றேன்
வேண்டும்போது கிட்டாமல்
  வேதனை தணலில் துவள்கின்றேன்

ஒருமுறை மீண்டும் வேண்டுமடி
  ஓய்ந்த உள்ளம் ஏங்குதடி
கருவிழி நடுவில் அரிக்குதடி
  காணதுடித்து கலங்குதடி

திருவுரு தேடி அலையுதடி
  தினமுன் நினைவில் கரையுதடி
வரும்வழி பார்த்து ஏங்குதடி
  வரங்களை வேண்டி காக்குதடி

மலர்ந்த உன்னில் நான்கூடி
  மகிழ்ந்து கிடந்தது அப்போது
உலர்ந்து போனது இதயம் தான்
  உள்ளம் எரியுது இப்போது

இதய சதையில் ஒரு பகுதி
  இற்று போனது என்னோடு
உதயம் என்பது எனக்கில்லை
  உதிரம் சொட்டுது கண்ணோடு

கண்ணின் திரையில் உருகாணும்
  கனவுகள் மட்டும் மறைவதில்லை
மண்ணின் ஆழம் செல்லாமல்
  மனதினில் அமைதி அமர்வதில்லை.

3 comments:

Anonymous said...

தோழர் சதீஷ் அவர்களுக்கு,


கவிதை நன்றாக உள்ளது.

நட்புடன்
சந்திரவதனி.

Anonymous said...

தோழர் சதீஷ் அவர்களுக்கு,


கவிதை நன்றாக உள்ளது.

நட்புடன்
சந்திரவதனி.

Anonymous said...

தோழர் சதீஷ் அவர்களுக்கு,

கவிதை நன்று.

நட்புடன்
சந்திரவதனி.

Post a Comment