Saturday, September 4, 2010

மரித்தவன் உயிர்த்தேன்

முகம் பார்ப்பதும் - அதிலுன் அகம் பார்ப்பதும் - இந்த
யுகம் முழுவதும் - உன்னால்
சுகம் காண்பதும்

    கனவுகளாய் வந்ததுண்டு என்னில் - ஆனால்
    கதையாகி போனதவை பின்னில்!
***
கண்வைப்பதும் - என்மேல்
மண்வைப்பதும் - வெந்த
புண்மீது தீயை
பெண்வைப்பதும்

    எத்தனை நாட்கள் தான் போகும் - இங்கே
    என்னுயிர் தாபத்தில் வேகும்!
***
மோகங்களே - சுகத்தின்
போகங்களோ? - என்னை
நாகங்களாய் - கொல்லும்
யாகங்களோ?

    ஒருபோதும் அடங்காத நெஞ்சும் - அடி
    ஓயாமல் உன்மனதை கெஞ்சும்!
***
பூவைத்தபின் - நெஞ்சில்
தீவைப்பதா? - அந்த
தீவைப்பதும் - பெண்ணே
நீவைப்பதா?

    நிச்சயம் நானன்று மரித்தேன் - நிலவே
    நினைவினில் நீவந்தாய் உயிர்த்தேன்!

No comments:

Post a Comment