Sunday, September 19, 2010

விடியலை நோக்கி!

என்றைக்கும் சற்றும்
குறையாத அதே
பகலிரவு தான் இன்றும்!

எனினும்

இன்றைய பகலின் பங்கை
இரவு திருடிகொண்டதொவென
இன்னமும் ஐயமாய் தானிருக்கிறது!


பட்டென முடிந்துபோன
பகலை விடவும்
பலவாறாய் நீளுமிரவு
படுத்துகிறது.

மூன்றுமுறை விழித்து பார்த்தும்
வானம் விடிந்திருக்கவில்லை


யார் யாரோ கல்லெறிந்து
கலைத்த என் கனவுகளில்
நீ மட்டும்
கவிதை பொழிந்தாய்

உன்முகம் கண்டபோதெல்லாம்
விடிந்துவிட்டதாய்
விளங்கிக்கொண்டது என் தவறு தான்!


சரி

எப்போது விடியும் என் வானம்?

No comments:

Post a Comment