Wednesday, March 2, 2011

முற்றுப்புள்ளியை நோக்கி

நிழலை தொடர்ந்து சென்றவன்
நிராசையோடு திரும்புவதை போல...
செந்தழலை தின்று செரித்தவன்
தண்ணீரை தவிர்ப்பது போல

என்னில் இருந்து நானே பிரிகிறேன்!

கண்ணாடியை காயப்படுத்தாமல்
பிரியும் பிம்பம் போல..
கிளைக்கு வலிக்காமல்
உதிரும் இல்லை போல...

***

முற்றுப்புள்ளிகள் எல்லாம்
கால்புல்லிகலாகும்
காலகட்டத்தில்.. இந்த
கால்புள்ளி,
முற்றுப்புள்ளியை நோக்கியே
முன்னேறுகிறது..

சில கால் புள்ளிகளின்
கால அளவை நீட்டிக்க!

No comments:

Post a Comment