Friday, November 23, 2012

பயணம்

கைபிடித்தபடி எங்கேயோ
என்னை கடத்தி செல்லுகிறது
காலம்!
நான் செய்த
நன்மைகளுக்கான
நன்றியறிவித்தலுக்காகவோ;
இதுவரையும்
தப்பித்துவந்த – என்
தவறுகளுக்கான
தண்டனைகளுக்காகவோ!
 
வற்றிப்போன கண்களோடும்
மரத்துப்போன மனதோடும்
பயணித்தபடி இருக்கிறேன்,
இலக்கோ
இலட்சியமோ
இல்லாமல்!

நீட்டித்துக்கொடுக்கப்படும்
நாட்கள் ஒவ்வொன்றும்
நிதர்சனமாய் சொல்லுகின்றன,
எனக்கான நாட்கள்

எதற்காகவோ இன்னமும்
மிச்சமிருந்து தொலைப்பதை!

 

No comments:

Post a Comment