Tuesday, May 11, 2010

தோல்வி

நிழலை தேடி சென்றவன்
நிராசையோடு திரும்புகிறேன்!

பாலையை வெல்ல சென்றவன்
பாவமாய் திரும்புகிறேன்!

நன்னம்பிக்கை முனை தேடி சென்றவன்
நசிந்த நினைவோடு திரும்புகிறேன்!

தன்னம்பிக்கை தேடி சென்றவன்
தகர்ந்து போய் திரும்புகிறேன்!

தோல்விகளை வெற்றி கொள்ள சென்றவன்
வெற்றிகளை தோல்விக்கு தந்து திரும்புகிறேன்!

எதிர்பார்ப்புக்களை எதிர்பார்த்து சென்றவன்
ஏமாற்றங்களின் ஏகாந்தத்தில் திரும்புகிறேன்!

1 comment:

Anonymous said...

எதிபர்ர்புகள் இருக்கிறவரை
வெற்றி,தோல்வி என்கிற
பாதிப்புகள் இருக்கும்.

அன்பு,யாரிடமும்
எதையும் எதிபர்க்காமல்
செலுத்தும்போது ,
குறைகளையும் சேர்த்து
நேசிக்கும் போது
அந்த வானம் கூட வசப்படும்

Post a Comment