Wednesday, February 3, 2010

இன்னொரு சந்திப்பு

நன்றாடிய வீதிகள்..
நின்றோடிய நாட்கள்..
கொண்டாடிய தினங்கள்..
சென்றோடிய கணங்கள்..

எல்லாம் பேசி தீர்த்த பின்

இறக்கி வைக்கப்பட்டதொரு
இனிய முத்தம்

தொடங்கி வைக்கப்பட்டதொரு
தொன்மை யுத்தம்

******

உன் ஸ்பரிசம் உன் இளமை சொன்னது
உன் வயது உன் முதுமை சொன்னது

இன்னொன்றுக்காக
இமை மூடி
நின்றபோது

உனக்கான மலர்ப்பாதை உன்னையும்
எனக்கான சவக்குழி என்னையும்
விடாமல்
விளித்துக்கொண்டிருன்தது
வினையாலணையும் கருவியால்

*****

விடை பெற்றோம் மீண்டும்
இன்னொரு பிரிவு!

No comments:

Post a Comment