Wednesday, May 15, 2013

வண்ணத்துப்பூச்சி!


 

 
வண்ணச் சிறகடித்து வண்ணத்து பூச்சியொன்று

  வட்டமிட்டு வட்டமிட்டு வளையவரப் பார்த்தவுடன்

எண்ணச் சிறகொடிந்து; எந்தன் நிலைமறந்து

  எகிறித் தாவியதை என்னிடத்தேக் கொண்டுவந்தேன்!

 

புள்ளிக் கோலமெல்லாம் பூஞ்சிறகு ஓரத்திலே

  பூப்பூவாய் தூவிவைத்து பூமியிலே விதைத்தவன்யார்?

பள்ளிச் சோலையில்தன் பட்டுமலர் சிறகடித்து

  பறந்துவரும் ஜீவனிடம் பக்குவமாய் கேட்கின்றேன்!

No comments:

Post a Comment