வண்ணச் சிறகடித்து
வண்ணத்து பூச்சியொன்று
வட்டமிட்டு வட்டமிட்டு வளையவரப் பார்த்தவுடன்
எண்ணச் சிறகொடிந்து;
எந்தன் நிலைமறந்து
எகிறித் தாவியதை என்னிடத்தேக் கொண்டுவந்தேன்!
புள்ளிக் கோலமெல்லாம்
பூஞ்சிறகு ஓரத்திலே
பூப்பூவாய் தூவிவைத்து பூமியிலே விதைத்தவன்யார்?
பள்ளிச் சோலையில்தன்
பட்டுமலர் சிறகடித்து
பறந்துவரும் ஜீவனிடம் பக்குவமாய் கேட்கின்றேன்!
No comments:
Post a Comment