Friday, March 12, 2010

எங்கே போய் முடியும்?

எல்லாம் முடிந்து போனவொரு
ஏகாந்த மாலையில்
ஏக்கங்கள் தீராத
ஏலாத விழிகளில் -
மிச்சமிருப்பதாய் தோன்றவில்லை
வாழ்க்கையும்
நம்பிக்கையும்!

*****

ஏமாற்றங்கள் மட்டுமே
எதார்த்தமாகிப்போன
என் வாழ்வில்
ஏதேனும் ஒரு
பேராச்சரியம் நிகழாதாவெனும்
நப்பாசை கூட காலாவதியாகி போய்விட்டது!

*****

உதாசீனப்படுத்துவோரையும்
உள்ளத்துள் நேசிப்பதால்
நெஞ்சுக்குள்ளே - இப்போது - இட
நெருக்கடி!

3 comments:

vanathi said...

ஏமாற்றங்கள்
ஏணிபடிகள்
ஆக்குவது
உங்கள்
கைகளில்
உள்ளது.

நட்புடன்
வானதி

சதீஷ் குமார் said...

இனிய தோழி வானதி,

நீங்கள் என் வயலில் நடவு செய்யும் நம்பிக்கை நாற்றுகளுக்கு நன்றி!

எனினும், எனது தவங்களுக்கான வரமாக சாபங்களே வந்து சேர்ந்ததால் வந்த வலி இது!

புரிந்து கொள்ளும் புத்திசாலித்தனம் உங்களுக்கு உண்டு என்பதை உணர்கிறேன்!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment