Friday, April 13, 2018

வாழ்தலும் தங்குதலும்

தெள்ளிய புலர்காலையில்
மெல்லிய ஒலியில்
எங்கிருந்தோ வந்து
செவி புகுந்தது சுப்ரபாதம்

விழித்து பார்த்த விடியலில்
என்னை சுற்றியும்
வீற்றிருந்தது வெறுமை!

அறை முழுக்க சூழும் சாம்பிராணி புகை இல்லை..
கண்ணா என்றழைக்கும் விளிச்சொல் இல்லை..
கண்ணாடி வளைகுலுங்க காப்பிக்கோப்பை நீட்டும் கரமில்லை..
தினத்தந்தியை கண்முன் காட்டிவிட்டு தராமல் ஓடும் விளையாட்டு இல்லை..

இப்படி
இல்லைகள் இல்லைகளாகவே இருந்துகொண்டிருந்தது

மெல்ல எதார்த்தத்துக்கு திரும்புகையில் தான் புரிகிறது

இப்போது நான் வேறு எங்கோ 'தங்கி'க்கொண்டு இருக்கிறேன்

***
வெறுமனே தங்கி இருப்பதற்கும்
வாழ்வதற்குமான வித்தியாசம்
மிகப்பெரியது என்பதுணர
வீண்செய்த காலங்கள் அதீதம்!

😞😢

No comments:

Post a Comment