நன்றாடிய வீதிகள்..
நின்றோடிய நாட்கள்..
கொண்டாடிய தினங்கள்..
சென்றோடிய கணங்கள்..
எல்லாம் பேசி தீர்த்த பின்
இறக்கி வைக்கப்பட்டதொரு
இனிய முத்தம்
தொடங்கி வைக்கப்பட்டதொரு
தொன்மை யுத்தம்
******
உன் ஸ்பரிசம் உன் இளமை சொன்னது
உன் வயது உன் முதுமை சொன்னது
இன்னொன்றுக்காக
இமை மூடி
நின்றபோது
உனக்கான மலர்ப்பாதை உன்னையும்
எனக்கான சவக்குழி என்னையும்
விடாமல்
விளித்துக்கொண்டிருன்தது
வினையாலணையும் கருவியால்
*****
விடை பெற்றோம் மீண்டும்
இன்னொரு பிரிவு!
Wednesday, February 3, 2010
Sunday, January 17, 2010
இணையாத இதையங்கள்
அடுத்த
அறையில்
அயர்ந்து உறங்குகிறது - என்
அரைக்கால் நூற்றாண்டு காதல்!
இதையத்தில்
இமையத்தை ஏற்றி வைத்து
இந்த அறையில்
இமை மூடாதிருக்கிறேன்
இந்த
இரவில்!
இருவர்க்கும்
இடையேயான
இடைவெளியாய்
இருந்துகொண்டிருப்பது - வெறும்
சுவர் மட்டுமே தானா??
இணையாத
இதையங்கள் கொண்ட உடல்கள்
இணைவதேயில்லை ஒருபோதும்!
அறையில்
அயர்ந்து உறங்குகிறது - என்
அரைக்கால் நூற்றாண்டு காதல்!
இதையத்தில்
இமையத்தை ஏற்றி வைத்து
இந்த அறையில்
இமை மூடாதிருக்கிறேன்
இந்த
இரவில்!
இருவர்க்கும்
இடையேயான
இடைவெளியாய்
இருந்துகொண்டிருப்பது - வெறும்
சுவர் மட்டுமே தானா??
இணையாத
இதையங்கள் கொண்ட உடல்கள்
இணைவதேயில்லை ஒருபோதும்!
Thursday, January 7, 2010
பேராசை
உள்ளம் உடைந்து போகும்போதெல்லாம்
உனது சில வார்த்தைகளில்
உண்டாகும் ஆறுதல்...
விழிகளில் வழியும் முன் - உன்
விரல்சுண்டி மரிக்கும் கண்ணீர்...
ஒவ்வொரு விடியலிலும்
ஓரளவேனும் அமைதி...
இதையத்திலேப்போதும்
இருக்கை இட்ட நீ..
துக்கம் தகர்க்கும் பொழுதுகளில் - உன்
துளிர்மடி கிட்டும் சாந்தி..
நட்ட்று வீழும் வேளை - கொஞ்சம் உன்
நம்பிக்கை வார்த்தைகள்..
இவை மட்டுமே எனக்கு
நிரந்தரமாகிவிடக்கூடாதா??
****** ********* ********** **********
எழுதப்பட்ட நாள்: 17-09-2000
உனது சில வார்த்தைகளில்
உண்டாகும் ஆறுதல்...
விழிகளில் வழியும் முன் - உன்
விரல்சுண்டி மரிக்கும் கண்ணீர்...
ஒவ்வொரு விடியலிலும்
ஓரளவேனும் அமைதி...
இதையத்திலேப்போதும்
இருக்கை இட்ட நீ..
துக்கம் தகர்க்கும் பொழுதுகளில் - உன்
துளிர்மடி கிட்டும் சாந்தி..
நட்ட்று வீழும் வேளை - கொஞ்சம் உன்
நம்பிக்கை வார்த்தைகள்..
இவை மட்டுமே எனக்கு
நிரந்தரமாகிவிடக்கூடாதா??
****** ********* ********** **********
எழுதப்பட்ட நாள்: 17-09-2000
கண்ணீர் தருணங்கள்
விழித்து பார்க்கும்
விடியல் ஒவ்வொன்றிலும் - நான்
விசாரிக்கப்படாமல் போகையிலும்..
இரவை கடத்த
இயலாத - என்
இற்றுவிட்ட
இதையம்
இறந்துவிடுமோ - என
இமைகள் துடிக்கையிலும்..
கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!
****
என்
பாச வேர்கள்
பட்டுபோகையிலும்
சுவாச மண்டலம்
சுட்டு போதையிலும்
கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!
****
தாங்க முடியாத தோல்விகளை - நான்
சந்திக்க நேர்கையிலும்
தூங்க முடியாத இரவுகளில் - நான்
சிந்திக்க முயலுகையிலும்
நான் நிராகரிக்கப்படும்
எல்லா நிமிடங்களிலும்
நான் சந்தேகிக்கப்படும்
எல்லா வினாடிகளிலும்
கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!
****
என்
வாழ்வின் முன்னுரையை
வாசிக்க நேர்கையிலும்
என்
தாழ்வின் காரணீயர்களை
தரிசிக்க நேர்கையிலும்..
கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!
****
எனினும்..
இன்று சிந்தப்பட்ட கண்ணீரின்
அடர்த்தியும் கனமும்
அதிகரித்திருப்பதற்கு
அடியேன் மட்டுமே காரணமல்ல!
********** ********** **********
எழுதப்பட்ட நாள்: 06.12.1999
எழுதப்பட்ட இடம்: கோவை
விடியல் ஒவ்வொன்றிலும் - நான்
விசாரிக்கப்படாமல் போகையிலும்..
இரவை கடத்த
இயலாத - என்
இற்றுவிட்ட
இதையம்
இறந்துவிடுமோ - என
இமைகள் துடிக்கையிலும்..
கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!
****
என்
பாச வேர்கள்
பட்டுபோகையிலும்
சுவாச மண்டலம்
சுட்டு போதையிலும்
கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!
****
தாங்க முடியாத தோல்விகளை - நான்
சந்திக்க நேர்கையிலும்
தூங்க முடியாத இரவுகளில் - நான்
சிந்திக்க முயலுகையிலும்
நான் நிராகரிக்கப்படும்
எல்லா நிமிடங்களிலும்
நான் சந்தேகிக்கப்படும்
எல்லா வினாடிகளிலும்
கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!
****
என்
வாழ்வின் முன்னுரையை
வாசிக்க நேர்கையிலும்
என்
தாழ்வின் காரணீயர்களை
தரிசிக்க நேர்கையிலும்..
கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!
****
எனினும்..
இன்று சிந்தப்பட்ட கண்ணீரின்
அடர்த்தியும் கனமும்
அதிகரித்திருப்பதற்கு
அடியேன் மட்டுமே காரணமல்ல!
********** ********** **********
எழுதப்பட்ட நாள்: 06.12.1999
எழுதப்பட்ட இடம்: கோவை
Monday, January 4, 2010
இவளுக்கு புதிரென்று பேர்!
அவளுக்கு இலக்கியம் தெரியாது!
இவளுக்கு
இலக்கிய ஆசிரியர்களின்
அகரவரிசையே அத்துப்படி!
*****
அவளுக்கு நவீனத்துவம் புரியாது!
இவளுக்கு
பின் நவீனத்துவம் கூட
பிரபலம்!
*****
அவளுக்கு பயணங்கள் பிடிக்காது!
இவளுக்கு
மாநிலத்தின் நீள அகலங்கள்
நினைவறைகளை
நிறைத்து நிற்கும்!
*****
அவளுக்கு தனிமை ஆகாது!
இவளுக்கு
பெருங்கூட்டம், உறவுகள், கலகலப்பு
உன்மத்தம்!
*****
அவளுக்கு
என்னை திகட்ட திகட்ட
நேசிக்க தெரிந்திருக்கிறது!
இவளுக்கு???
இவளுக்கு
இலக்கிய ஆசிரியர்களின்
அகரவரிசையே அத்துப்படி!
*****
அவளுக்கு நவீனத்துவம் புரியாது!
இவளுக்கு
பின் நவீனத்துவம் கூட
பிரபலம்!
*****
அவளுக்கு பயணங்கள் பிடிக்காது!
இவளுக்கு
மாநிலத்தின் நீள அகலங்கள்
நினைவறைகளை
நிறைத்து நிற்கும்!
*****
அவளுக்கு தனிமை ஆகாது!
இவளுக்கு
பெருங்கூட்டம், உறவுகள், கலகலப்பு
உன்மத்தம்!
*****
அவளுக்கு
என்னை திகட்ட திகட்ட
நேசிக்க தெரிந்திருக்கிறது!
இவளுக்கு???
Sunday, January 3, 2010
உயிர்த்திருத்தலின் வலி
நினைவுகள் பகிர்ந்து கொண்டேன் - சில
நிஜங்களை உணர்ந்து கொண்டேன்!
பனைமரம் போலே வளர்ந்தும் - நான்
பக்குவம் இல்லை கண்டேன்!
விழிகளில் கண்ணீர் துளிகள் - பெரும்
விரைவிலே வழிய நின்றேன்!
மொழிகளில் சொல்லா துயரம் - என்
மோனத்தில் உரைத்து நின்றேன்!
போனவை போன பின்பும் - நான்
போக்கற்று போய்விட வில்லை!
ஆனது ஆனது என்று - என்னை
ஆறுதல் செய்திட வில்லை!
இன்பமும் துன்பமும் வாழ்வில் - என்றும்
இருபக்கம் என்றே சொல்லி
துன்பத்தை ஏற்று கொள்ளும் - பெரும்
துயரத்தை பழகி கொண்டேன்!
துன்பமும் துன்பமே அல்ல - ஒரு
துப்பின்றி தோற்ற முயற்சி!
வன்மமும் கோபமும் இன்றி - நல்
வாழ்வுக்கு ஆன பயிற்சி!
என்பதை கண்டு கொண்டும் - நான்
இழந்ததை எண்ணி நொந்தேன்!
என்பதால் என்ன செய்தேன் - நான்
இன்னமும் உயிர்த்து நின்றேன்.
நிஜங்களை உணர்ந்து கொண்டேன்!
பனைமரம் போலே வளர்ந்தும் - நான்
பக்குவம் இல்லை கண்டேன்!
விழிகளில் கண்ணீர் துளிகள் - பெரும்
விரைவிலே வழிய நின்றேன்!
மொழிகளில் சொல்லா துயரம் - என்
மோனத்தில் உரைத்து நின்றேன்!
போனவை போன பின்பும் - நான்
போக்கற்று போய்விட வில்லை!
ஆனது ஆனது என்று - என்னை
ஆறுதல் செய்திட வில்லை!
இன்பமும் துன்பமும் வாழ்வில் - என்றும்
இருபக்கம் என்றே சொல்லி
துன்பத்தை ஏற்று கொள்ளும் - பெரும்
துயரத்தை பழகி கொண்டேன்!
துன்பமும் துன்பமே அல்ல - ஒரு
துப்பின்றி தோற்ற முயற்சி!
வன்மமும் கோபமும் இன்றி - நல்
வாழ்வுக்கு ஆன பயிற்சி!
என்பதை கண்டு கொண்டும் - நான்
இழந்ததை எண்ணி நொந்தேன்!
என்பதால் என்ன செய்தேன் - நான்
இன்னமும் உயிர்த்து நின்றேன்.
Friday, November 13, 2009
இது தான் மிச்சம்!
திறந்த புத்தகம் என் வாழ்க்கை!
அவரவர் அவரவர்க்கு
பிடித்த பக்கங்களை
பிய்த்து கொண்டாடினர்!
சிலருக்கு என் மகிழ்வு
சிலருக்கு என் துயரம்
சிலருக்கு என் சிரிப்பு
சிலருக்கு என் அழுகை
சிலருக்கு என் வெற்றி
சிலருக்கு என் தோல்வி
முகத்தில் இப்போது மிச்சம்
முகப்பு அட்டையின் எச்சம்!
அவரவர் அவரவர்க்கு
பிடித்த பக்கங்களை
பிய்த்து கொண்டாடினர்!
சிலருக்கு என் மகிழ்வு
சிலருக்கு என் துயரம்
சிலருக்கு என் சிரிப்பு
சிலருக்கு என் அழுகை
சிலருக்கு என் வெற்றி
சிலருக்கு என் தோல்வி
முகத்தில் இப்போது மிச்சம்
முகப்பு அட்டையின் எச்சம்!
Subscribe to:
Posts (Atom)
